விம்பிள்டன் : ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதி

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் போட்டிகளில், ரோஜர் பெடரர் காலிறுதிக்கான தகுதி பெற்றார்.

அவர் ஜெர்மனியின் திறமையான ஆட்டக்காரரான மிஷா செவரேவ்வை 7-6(3), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். முப்பத்தி ஐந்து வயதாகும் பெடரர் வெற்றி பெற்றால் அதிக வயதில் பட்டம் வென்ற வீரராக இருப்பார். பெடரர் கடந்த மூன்று ஆட்டங்களிலும் ஒரு செட்டைக் கூட இழக்காமல் வென்று வருகிறார்.
உலகின் முப்பதாவது தர நிலை வீரராக இருக்கும் செவரேவ் இதுவரை நான்கு முறை பெடரருடன் விளையாடியுள்ளார்; ஆனால் ஒருமுறை கூட வென்றதில்லை. செவரேவ் 18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள பெடரரை வெல்வதற்கு கடும் முயற்சி செய்தாலும் முதல் செட்டில் ஒரு டை-பிரேக்கரை எதிர்கொண்டது தவிர நிலைத்து விளையாடிய பெடரர் அடுத்த இரண்டு செட்களில் பிரேக் பாயிண்ட்களை எடுத்து ஆட்டத்தை ஒரு ஏஸ் சர்வீசுடன் வென்றார்.
Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top