Month: April 2017

ஏடிஎம்மில் எடுத்த புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறவில்லை

மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டில் புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. இதனையடுத்து புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சு பிழை இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அப்போது உடனடி தேவை என்ற நிலையில் அவசரமாக அச்சடிக்கப்பட்டதால் இந்த பிழை நேரிட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது, ஆனால் இப்போது வரையில் 500 ரூபாய் நோட்டுகளில் பல்வேறு …

ஏடிஎம்மில் எடுத்த புதிய 500 ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெறவில்லை Read More »

Share

அய்யாக்கண்ணுவை அவதூறாக பேசினால் தமிழ்நாட்டில் இனிமேல் எச்.ராஜா நடமாட முடியாது

பாஜகவின் ஹெச்.ராஜா கண்ணியமின்றி பேசுவதாகவும், இனி தொடர்ந்தால் தமிழகத்தில் நடமாட முடியாது என்றும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜகவின் எச்.ராஜா நாவடக்கம் இன்றி பேசி வருவதாக குறிப்பிட்டார். பெரியாரைப் பற்றி கேவலமாகப் பேசினார். சோனியா காந்தியைப் பற்றி கேவலமாக பேசினார். தற்போது தென்னிந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணுவையும் அவதூறாக பேசியுள்ளதாக கூறினார். டெல்லியில் 40 நாட்களுக்கும் மேலாக உயிரை பணயம் வைத்து …

அய்யாக்கண்ணுவை அவதூறாக பேசினால் தமிழ்நாட்டில் இனிமேல் எச்.ராஜா நடமாட முடியாது Read More »

Share

இரட்டை இலைக்கு லஞ்சம்: ஏஜெண்டு நரேசிடம் ஹவாலா பணம் ரூ.50 லட்சம் சிக்கியது

இரட்டைஇலை சின்னம் பெறுவதற்கு தேர்தல் கமி‌ஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை போலீசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் நடந்த விசாரணைக்கு பின் டி.டி.வி. தினகரனை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர். பெசன்ட் நகரில் உள்ள மத்திய அரசு அலுவலகமான ராஜாஜி பவனிலும், தினகரனின் அடையாறு இல்லத்திலும் …

இரட்டை இலைக்கு லஞ்சம்: ஏஜெண்டு நரேசிடம் ஹவாலா பணம் ரூ.50 லட்சம் சிக்கியது Read More »

Share

தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா

தென்கொரியாவில் அமெரிக்கா அமைக்கவிருக்கும் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியான ஏவுகணை பாதுகாப்பு கேடய அமைப்புக்கு ஆகும் செலவை அமெரிக்கா கொடுக்க ஒப்புக்கொண்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கான செலவை தென்கொரியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தொலைபேசியில் மேற்கொண்ட உரையாடலை அடுத்து அமெரிக்கா நிதி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது தென் கொரியாவில் அமைக்கப்படும் இந்த பாதுகாப்பு கேடயம், வட கொரியாவில் இருந்து …

தென் கொரியாவில் அமைக்கும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பின் செலவை ஏற்றது அமெரிக்கா Read More »

Share

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பயங்கர அதிர்வை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனிசியா கடற்கரையை ஒட்டிய பகுதி மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் தூக்கத்தில் இருந்து விழித்து பயத்தில் வீட்டை விட்டு வெளியேறினர். சில கிராமங்களில் சிறிய அளவிலான சுனாமி எச்சரிக்கை காரணமாக மக்கள் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. …

பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.8 ஆக பதிவு Read More »

Share

தமிழ்நாடு முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற ஐகோர்ட்டு தடை

தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்றக்கோரி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2015–ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல் மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் பட்டுராஜன் உள்ளிட்ட மேலும் சிலரும் மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் கடந்த டிசம்பர் மாதம் 20–ந்தேதி பிறப்பித்த உத்தரவில், மதுரை ஐகோர்ட்டுக்கு உட்பட்ட 13 மாவட்ட தலைநகரங்களிலும் சாலை ஓரங்கள், நீர்நிலைகள், காலிமனைகள், தனியார் நிலங்கள் போன்ற பகுதிகளில் …

தமிழ்நாடு முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற ஐகோர்ட்டு தடை Read More »

Share

வடகொரியாவிடம் உள்ளவை டம்மி ஆயுதங்கள் ?

மூன்றே குண்டுகளில் உலகையே அழித்துவிடுவோம் என்று மார்தட்டிய வடகொரியாவிடம் உள்ள பெரும்பாலான ஆயுதங்கள் உண்மையானவை இல்லை என்றும் அவை வெறும் டம்மி ஆயுதங்கள் என்பதை அமெரிக்க உளவுத்துறை ஆதாரங்களுடன் கண்டு பிடித்துள்ளது. எனவே வடகொரியாவை அமெரிக்கா விரைவில் தாக்கும் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் வட கொரியாவில் நடைபெற்ற, முன்னாள் அதிபர் கிம் இல் சங்-ன் 105 -ஆவது பிறந்த தின கொண்டாட்டத்தின்போது மிக பிரமாண்டமாக பாரியா ராணுவ அணிவகுப்பை அதிபர் கிம் ஜாங் நடத்தினார். அமெரிக்கா உள்பட …

வடகொரியாவிடம் உள்ளவை டம்மி ஆயுதங்கள் ? Read More »

Share

கொடநாடு பங்களா காவலாளி கொலையில் குற்றவாளி சிக்கினார்

கொடநாடு பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த நபர் சிக்கினார். கடந்த 24ம் தேதி(ஏப்.,24) மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கேரளாவை சேர்ந்த நபர் பிடிபட்டார். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அளக்கரை அருகே சொகுசு பங்களாவில் சதித்திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு மொபைல் போன் …

கொடநாடு பங்களா காவலாளி கொலையில் குற்றவாளி சிக்கினார் Read More »

Share

பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா மரணம்

மும்பை, அமர் அக்பர் அந்தோணி, குர்பானி, மேரே அப்னே உள்பட பல இந்திமொழி வெற்றிப்படங்களில் நடித்தவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி.யுமான வினோத் கண்ணா நேற்று மரணமடைந்தார். 1970களில் மிகவும் பிரபலமான நடிகரான வினோத் கன்னா, பாஜகவால் முன்னிறுத்தப்பட்டு, பஞ்சாப் நாடாளுமன்ற தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றவர். 1970 மற்றும் 1980களில் இவர் நடித்த பாலிவுட் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. 1968ல் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய இவர், 1990களில் அரசியலில் நுழைவதற்கு முன் 100க்கும் …

பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா மரணம் Read More »

Share

பிரபல நடிகர் வினு சக்ரவர்த்தி காலமானார்

தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமான நடிகர் வினு சக்ரவர்த்தி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72. கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலமின்றி இருந்து வந்த அவர், வியாழக்கிழமையன்று மாலை 7 மணியளவில் காலமானார். ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் கன்னட பதிப்பான பரசக்கே கண்டதிம்ம படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான வினு சக்கரவர்த்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என 1002 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கோபுரங்கள் சாய்வதில்லை, மண் வாசனை ஆகிய படங்கள் இவரது …

பிரபல நடிகர் வினு சக்ரவர்த்தி காலமானார் Read More »

Share
Scroll to Top