இலங்கைக்கு மீண்டும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு நிறுத்தப்பட்ட ஜி.எஸ்.பி வரிச்சலுகை எதிர் வரும் 19 திகதி முதல் மீண்டும் வழங்கப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை தொடர்பான மாலத்திவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான பிரதிநிதி துன் லாய் மார்கு இதனை தெரிவித்தார். ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை கடந்த மகிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்டது. கடந்த ஆட்சிக் காலத்தில் …