இலங்கை

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசின் இந்த நடவடிக்கை, மீனவர் பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணும் முயற்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். பாரம்பரியமாக பாக்ஜலசந்தியில் …

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கும் இலங்கை சட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி Read More »

Share

இலங்கை: பாதுகாப்புத்துறை செயலராக ஜெனரல் கபில வைத்திய ரத்னம் நியமனம்

இலங்கை பாதுகாப்புச் செயலர்,  ஜனாதிபதி  செயலாளர் மற்றும் புதிய இராணுவத் தளபதி உள்ளிட்ட அதிகாரிகளை இலங்கை அரசு நியமித்துள்ளது. இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாதுகாப்புத்துறை செயலராக ஜெனரல் கபில வைத்தியரத்னம், ராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் மகேஷ்சேனாநாயக்க,  ஜனாதிபதியின் புதிய செயலாளராக கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.  ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து  கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முன்னாள் மந்திரி ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

Share

இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும் : அதிபர் சிறிசேனா

இறுதிக் கட்டப் போரின்போது சரணடைந்தவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கும், அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டுப் போர், கடந்த 2009ம் ஆண்டு, மஹிந்தா ராஜபக்சே அதிபராக இருந்த போது முடிவுக்கு வந்தது. இறுதிக்கட்டப் போரில், பல்லாயிரக்கணக்கில் அப்பாவி தமிழ் மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச தமிழ் சமூகத்தினர் வீடியோ ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.இறுதிக்கட்டப் போரின் போது, இலங்கை ராணுவத்திடம் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களும், …

இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும் : அதிபர் சிறிசேனா Read More »

Share

வெளிநாடு சென்ற இலங்கை தமிழ் பெண் பரிதாபமாக மரணம்

இலங்கையிலிருந்து தொழில் வாய்ப்பிற்காக சவூதி அரேபியாவிற்கு சென்ற தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரியாத்திலுள்ள இலங்கைத்தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உறவினர்களை தொடர்புகொள்வதற்கு பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது. இதில் குருசாமி ஐயா ரஞ்சிதம் என்ற 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் குறித்த பெண்ணின் தேசிய அடையாள அட்டையில் – C. 31/B வண்ணான்கேணி, பளை என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் கடவுச்சீட்டில் – 66/8, புனித ஜேம்ஸ் வீதி, கொழும்பு – …

வெளிநாடு சென்ற இலங்கை தமிழ் பெண் பரிதாபமாக மரணம் Read More »

Share

இலங்கையில் சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை விற்க தடைச் சட்டம்

சர்வதேச விளையாட்டு போட்டிகளின் போது வென்றெடுக்கப்படும் பதக்கங்களை விற்பனை செய்ய முடியாத வகையில் புதிய சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை அறிவித்தார். வறுமை காரணமாக தான் வென்றெடுத்த ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை விற்பனை செய்யப்போவதாக பிரபல ஓட்ட வீராங்கனை சுசந்திக்கா ஜெயசிங்க அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜயசேகர ஒலிம்பிக் பதக்கம் என்பது சுசந்திக்கா ஜயசிங்கவின் …

இலங்கையில் சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை விற்க தடைச் சட்டம் Read More »

Share

இலங்கை: கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டது

இலங்கையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் தெற்கு மற்றும் மேற்கு பகுதி  மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி  91 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   200 க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண …

இலங்கை: கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-யை தொட்டது Read More »

Share

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே சந்திப்பு

இலங்கை பிரதமர் ரனில் விக்ரம சிங்கே 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்து சேர்ந்தார். அவருடன் உயர் மட்ட தூதுக்குழு ஒன்றும் வந்துள்ளது. டெல்லி தாஜ்பேலஸ் ஓட்டலில் அவரை நேற்று காலை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து ரனில் விக்ரம சிங்கேயும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்புகளை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி …

பிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே சந்திப்பு Read More »

Share
Scroll to Top