Latest Posts

ஐ.பி.எல் இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டம் வென்றது மும்பை அணி

May 22, 2017

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் புனே அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றது. ஐ.பி.எல். கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி ஐதராபாத் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதிகபட்சமாக புனே அணியின் கேப்டன் ஸ்மித் 51 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் ஜான்சன் 3 விக்கெட்டுகளைவும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Read More →

ஒருவர் மிக நேர்மையானவராக இருக்கக் கூடாது

May 21, 2017

ஒருவர் மிக நேர்மையானவராக இருக்கக் கூடாது. நேரான மரங்களே முதலில் வெட்டப் படுகின்றன. நேர்மையானவரே முதலில் ஏமாற்றப்படுகிறார்

Read More →

இன்று ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி

May 21, 2017

இன்றிரவு நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் புனே அணியை எதிர்த்து மும்பை இண்டியன்ஸ் அணி விளையாட உள்ளது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் 10-வது ஐ.பி.எல். சீசன் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் என்ற அடிப்படையில் தலா 2 முறை மோதின. மே 14ம் தேதியுடன் லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்தன. இதன் முடிவில் மும்பை 10 வெற்றிகளை பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. 9 வெற்றிகளுடன் 18 புள்ளி பெற்று புனே 2வது இடத்தை பிடித்தது. முதல் 2 இடங்களை பிடித்த மும்பை – புனே அணிகள் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் மோதின.

Read More →

‘சங்கமித்ரா’ படத்தை சர்வதேச அளவில் பேச வைக்கப்போகிறேன் : சுந்தர். சி

May 21, 2017

‘சங்கமித்ரா’ சர்வதேச அளவில் பேசப்படும். அதுதான் எங்கள் குறிக்கோள் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்துள்ளார். பிரான்ஸில் கான் திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘சங்கமித்ரா’ படம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் முரளி ராமசாமியும் பங்கேற்றுள்ளனர். கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘சங்கமித்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இணையத்தில் வெளியிடப்பட்டும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ‘சங்கமித்ரா’ குறித்து முதன் முறையாக இயக்குநர் சுந்தர்.சி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “‘சங்கமித்ரா’ பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக இருக்கும்.

Read More →

காதலரை மிரட்டி கைக்குள் வைத்திருக்கும் ஆலியா பட்

May 21, 2017

பாலிவுட் நடிகை ஆலியா பட்டும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் சித்தார்த் மல்ஹோத்ராவும், ஜாக்குலின் பெர்ணான்டஸும் சேர்ந்து ரீலோடட் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்கள். சித்தார்த் மற்றும் ஜாக்குலின் இடையே தற்போது நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆலியா பட்டுக்கு தெரிய இனி ஜாக்குலின் பெர்ணான்டஸுடன் சேர்ந்து பார்த்தேன் அவ்வளவு தான் என தனது காதலரை எச்சரித்துள்ளாராம். காதலியின் பேச்சை கேட்டு சித்தார்த்தும் ஜாக்குலினுடன் ஊர் சுற்றுவதை நிறுத்தியுள்ளாராம்.

Read More →

“AAA” தயாரிப்பாளரை மிரட்டும் சிம்பு

May 21, 2017

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் “AAA”. படத்தில் சில காட்சிகளும் வசனங்களும் “AAA” ரேட்டிங்கில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. “AAA” என்றால் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்று அர்த்தம் சொல்லப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் வைரமுத்து ஒரு பாடலை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலை சிம்புவே பாடியுள்ளார். இப்பாடலை பிரம்மாண்டமாக படமாக்க வேண்டும் என இயக்குனரிடம் சொல்லியிருக்கிறார் சிம்பு. ஏற்கனவே பட்ஜட் பல மடங்கு உயர்ந்துவிட்டதால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அதிகமாக செலவு செய்யமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். இதை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், சிம்புவிடம் சொல்ல, கடுப்பாகிப் போன சிம்பு, “AAA” படத்தைப் பார்க்காதீர்கள் என்று ரசிகர்களுக்கு ட்விட்டரில் அறிவிப்பேன் என மிரட்டுகிறாராம்.

Read More →

இலங்கையில் ஆலய கட்டுமானம் இடிந்து பலர் காயம்

May 21, 2017

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள இந்து ஆலயமொன்றின் கட்டுமானப் பணிகளின் போது கட்டடம் இடிந்து விழுந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இன்று சனிக்கிழமை மாலை இடம் பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மற்றும் மட்டக்களப்பு அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான மண்டப கட்டடப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மண்டபத்திற்கான கூரை கான்கிரீட் இடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை கட்டடம் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் கட்டட நிர்மாண தொழிலாளர்கள் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் போலிஸார் தெரிவிக்கின்றனர். கட்டட இடிபாடுகளுக்கள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் இடிபாடுகளை அகற்றி தேடும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More →

ரஜினிக்கு எங்களுடைய கதவு எப்போதும் திறந்தே இருக்கும் பா.ஜனதா

May 21, 2017

ரஜினிகாந்த் அரசியல் குறித்து பேசிஉள்ள நிலையில் எங்களுடைய கதவு ரஜினிக்கு எப்போதும் திறந்தே இருக்கும் என கூறி பா.ஜனதா தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்து உள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஜினிக்காக பா.ஜனதாவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். நல்ல மக்கள் யார் வேண்டு மானாலும் பா.ஜனதாவில் வந்து சேரலாம் என்றார் அமித் ஷா. ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய அமித் ஷா, எப்போதும் எங்களுடைய கட்சிக்கு சூப்பர் ஸ்டாரை வரவேற்போம் என்றார். ரஜினிகாந்த் அரசியல் விஷயங்களில் முன்நோக்கி நகர்வதற்கு முன்னதாக அவர் அரசியலில் இணைய வேண்டும் என்றும் பேசிஉள்ளார் அமித் ஷா.

Read More →

பாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்

May 21, 2017

இந்தியாவின் கேரள மாநிலத்தில், பல ஆண்டுகளாக இந்துமத சாமியார் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறி, அவரது ஆணுறுப்பை வெட்டினார் ஆத்திரமடைந்த 23 வயது இளம் பெண். பாதிப்புக்குள்ளான பெண்ணின் நடவடிக்கையைப் பாராட்டியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆணுறுப்பை வெட்டியது என்பது ஓர் அசாத்தியமான மற்றும் தைரியமான செயல் என்று கூறியுள்ளார். குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சந்தேக நபரின் பெயர் கங்கேஷானந்தா தீர்த்தபடா என்றும், அவர் உடல்நலமின்றி அவதிப்பட்டு வரும் அப்பெண்ணின் தந்தைக்கு பிரார்த்தனை சடங்குகளை செய்ய அடிக்கடி வீட்டிற்கு வருவார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள துயரங்களிலிருந்து தன்னுடைய பூஜையின் மூலம் இந்த புனித மனிதர் தங்களை காப்பாற்றுவார் என்று அப்பெண்ணின் தாயார் நம்பியிருந்தார்.

Read More →

வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

May 21, 2017

சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை மீறி வட கொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. இன்று (ஞாயிறு) மதியம் உள்ளூர் நேரப்படி ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப்படைகளின் அலுவலகங்கள் கூறியுள்ளது. வட கொரியா ஒருவாரத்திற்கு முன்னர் ஏவுகணை ஒன்றை பரிசோதித்த நிலையில் தற்போது மீண்டும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. முன்பு நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையை அடுத்து, இந்த ராக்கெட் பெரிய அணு ஆயுதம் ஒன்றை தாங்கிச்செல்லும் திறன் படைத்தது என்று வட கொரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த திங்களன்று, வட கொரியா இதுபோன்ற பரிசோதனை இனிமேல் நடத்தக்கூடாது என்று ஐ.

Read More →
« Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 Next »