கேரள மருத்துவமனைகளால் அவசர சிகிச்சை கொடுக்கப்படாமல் அலைகழிக்கப்பட்ட தமிழர் மரணம்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். ஞாயிற்றுக் கிழமை இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்களில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இவர் ஆம்புலன்சில் கொல்லம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு செயற்கை சுவாசம் அளிக்கும் சிகிச்சை வசதி இல்லாததால், முருகனை மருத்துவமனையில் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 50 கி.மீ., தொலைவில் உள்ள திருவனந்தபுரம் மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அவர் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு இரண்டு மணி நேரம் காக்க வைக்கப்பட்ட பிறகு, அவசர சிகிச்சை பிரிவில் அறை வசதி இல்லை என்று கூறி, முருகனை மருத்துவமனையில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டது என ஆம்புலன்ஸ் டிரைவர் கூறினார். இதன் பிறகு மீண்டும் கொல்லம் நகருக்கு ஆம்புலன்ஸ் மூலம் முருகன் கொண்டு வரப்பட்டார். வரும் வழியில்இருந்த அனைத்து மருத்துவமனைகளும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தன. இதையடுத்து, இன்று (ஆக.,8) காலை, 6 மணிக்கு ஆம்புலன்சில்இருந்தபடி முருகன் உயிர் துறந்தார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கொடுத்த புகாரை கொல்லம் காவல்துறை ஆணையர் பெற்றுக் கொண்டார். தற்போது, சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனைகள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top