இந்தியாவின் தற்போதைய உதவி ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவி காலம் வரும் 10-ந் தேதியுடன் முடிகிறது. புதிய உதவி ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடுவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சிகளின் சார்பில், மகாத்மா காந்தியின் பேரரான, கோபாலகிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர்.
இன்று மாலை 5 மணியளவில் இத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவுற்றது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் அடிப்படையில், பாஜக வின் வேட்பாளரான வெங்கையா நாயுடு வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதலாம்.