Day: July 27, 2017

டிஐஜி ரூபாவிடம் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ்

பெங்களூரு சிறையில் முறைகேடு பற்றிய புகார்களை கூறிய டிஐஜி ரூபாவிடம் 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதாகவும் அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் விவகாரத்தை,  டிஐஜி ரூபா அம்பலப்படுத்தி இருந்தார். இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவின்பேரில், உயர்மட்ட குழு விசாரணை நடத்த தொடங்கியது. …

டிஐஜி ரூபாவிடம் நஷ்டஈடு கோரி, கர்நாடக சிறைத்துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ், வக்கீல் நோட்டீஸ் Read More »

Share

அப்துல் கலாமின் மணிமண்டபத்தை நரேந்திர மோடி திறந்துவைத்தார்

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ராமேஸ்வரத்தை அடுத்து தங்கச்சிமடத்திலுள்ள பேக்கரும்பில் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். கலாம் நினைவிடத்திற்கு வந்திறங்கிய மோடியை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். எடப்பாடி பழனிச்சாமியுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பிக்கள் சிலரும் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து, வளாகத்தில் கொடி ஏற்றிவைத்துவிட்டு மணி மண்டபத்தை திறந்து …

அப்துல் கலாமின் மணிமண்டபத்தை நரேந்திர மோடி திறந்துவைத்தார் Read More »

Share

தமிழக பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்: ‘அரியர்’ முறை ஒழிப்பு

தமிழக பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளிலிருந்து  2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் ‘அரியர்’ எனப்படும், தோற்ற பாடத்தை பின்வரும் பருவத் தேர்வுகளுடன் சேர்த்து எழுதும் முறை ஒழிக்கப்பட்டு, புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து கல்விக்குழு டீன் டி.வி.கீதா  கூறியதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு …

தமிழக பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்: ‘அரியர்’ முறை ஒழிப்பு Read More »

Share

பீகார் டிராமா: முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலகினார், மீண்டும் பதவி ஏற்கிறார்; சுஷில் மோடி துணை முதல்வராகிறார்

பீகார் நேற்று பதவி விலகிய முதல்வர் நிதீஷ் குமார், இன்று மீண்டும் பதவி பா.ஜ.க. ஆதரவுடன் பதவி ஏற்பார். அவருடன் பா.ஜ.க. தலைவர் சுஷில் மோடி துணை முதல்வராக பதவி ஏற்பார். 2015ம் ஆண்டு நடைபெற்ற பிகார் தேர்தலில் மகா கூட்டணி அமைத்து ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் வெற்றி பெற்றது. நிதீஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஷ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி வகித்தனர்.  இந்நிலையில், தேஜஸ்வி மீது …

பீகார் டிராமா: முதல்வர் நிதீஷ் குமார் பதவி விலகினார், மீண்டும் பதவி ஏற்கிறார்; சுஷில் மோடி துணை முதல்வராகிறார் Read More »

Share
Scroll to Top