லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி வென்றது.
இந்திய அணியைப் பொறுத்தவரை, இறுதிப் போட்டியில் பங்கேற்றதே பெரிய சாதனைதான்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர்.முதலில் நிதானத்துடன் ஆடிய இங்கிலாந்து அணி 150 ரன்களுக்கு பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
சாரா டெய்லர் 45 ரன்களும், நாட் ஸ்கைவர் 51 ரன்களையும் அடித்து இங்கிலாந்த் அணிக்கு வலுசேர்த்தனர். இந்திய அணியின் கோஸ்வாமி 3 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக என்.ஆர்.ஸ்கீவர் 51 ரன்கள் எடுத்துள்ளார். இதையடுத்து, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்களை எடுத்தது இங்கிலாந்து அணி.
இதனைத் தொடர்ந்து, 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் மந்தனா, கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஜி.ராவட் 115 பந்துகளில் 86 ரன்கள் குவித்து அணியின் வலுவான நிலைக்கு அடித்தளமிட்டார். இந்நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், இந்தியா தடுமாறத்தொடங்கியது. இறுதியாக 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் 4வது முறையாக இங்கிலாந்து அணி உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.