சமாதானத்திற்கான நோபல் பரிசுப் பெற்றவரான லியு சியாவ்போ உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சீன அரசின் பிரபலமான விமர்சகராகவும், மனித உரிமைச் செயற்பாட்டளரும் இருந்த அவரை சீன அரசு 11 ஆண்டுகளாக சிறையில் அடைத்து இருந்தது. கல்லீரல் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமையன்று சிகிச்சைகள் பலனின்றி அவர் இறந்தார்.
லியு சியாவ்போவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதில் இருந்து, அவருடைய மனைவி லியு சியா சீன அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால், லியு சியாவ்போவுக்கு புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட நகரான ஷென்யாங்கில் நடைபெற்ற இறுதிச் சடங்கில், அவருடைய மனைவி கலந்து கொண்டார். அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் லியு-விற்கு பிரியாவிடை அளித்தனர்.
“உள்ளூர் பழக்கவழக்கப்படியும், குடும்பத்தினரின் விருப்பப்படியும்” லியு சியாவ்போவின் உடல் எரியூட்டப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். மொஸாட்டின் இரங்கற்பாட்டு லியு சியாவ்போவின் இறுதிச் சடங்கில் இசைக்கப்பட்டது.