சோமாலியா: ராணுவம்-பயங்கரவாதிகள் மோதலில் 18 பயங்கரவாதிகள் பலி

சோமாலியாவில் அல்கொய்தா ஆதரவு பெற்ற அல்-சபாப்  பயங்கரவாதிகளுக்கு எதிராக சோமாலியா ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

அங்குள்ள பண்ட்லாந்து பிராந்தியத்தில் கல்கலா மலைப் பிரதேச பகுதிகளில் அல்-சபாப் பயங்கரவாதிகள் முகாம்களை அமைத்து உள்ளனர். இந்த முகாம்களை குறிவைத்து ராணுவம் அதிரடி தாக்குதலை அரங்கேற்றியது. இதில் இருபிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளின் 6 முகாம்களை அழித்து, அவர்களின் ஆயுதங்களை கைப்பற்றியதாக ராணுவம் நேற்று தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலை பயங்கரவாதிகளும் உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனால் தங்கள் தரப்பில் எந்த உயிரிழப்பும் நிகழவில்லை என அவர்கள் மறுத்துள்ளனர்.

அல்-சபாப் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் பண்ட்லாந்து பிரதேச ராணுவத்தினருக்கு, அமெரிக்க படையினர் ஆதரவும், பயிற்சியும் அளித்து வருகின்றனர். எனினும் இந்த தாக்குதலில் அமெரிக்க படையினரின் பங்களிப்பு இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top