“அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் தீவிரவாதத்தை பயன் படுத்துகின்றன”: ஜி-20 மாநாட்டில் மோடி பேச்சு

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஜி-20 அமைப்பின் 2 நாள் மாநாடு, ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் ஜி 20 நாட்டை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அனைவரும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற  பிரதமர் மோடி பேசுகையில்,

தெற்கு ஆசியாவில் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ், அல் கொய்தா, நைஜீரியாவில் போஹோகாரம் என்று பல்வேறு பெயரில் தீவிரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இருந்தாலும் தீவிரவாதம் மற்றும் பலரை கொன்று குவிப்பது தான் அவர்களது நோக்கமும் குறிக்கோளும் ஆகும்.

‘‘பாகிஸ்தானில் பெருகி வரும் தீவிரவாதம் குறித்து கடுமையாக தாக்கினார். அப்போது அரசியலில் சாதனை படைக்க சில நாடுகள் தீவிரவாதத்தை பயன் படுத்துகின்றன. அதை ஜி20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவதில் பிரிக்க்ஸ் நாடுகளிடையே ஒருமித்த கருத்து தேவை. பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளிப்பதை நிறுத்த வேண்டும்; பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதை தடுக்க வேண்டும்;  உலகளாவிய முறையில் பயங்கரவாதத்தை ஒழிக்கவும், பொருளாதாரத்தை பலப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top