புதுச்சேரியில் 3 பா.ஜ.க. நியமன எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்து தன் விசுவாசத்தைக் வெளிக்காட்டினார் கிரண்பேடி

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி இருந்து வருகிறார். மிக நேர்மையான அதிகாரியென ஊடகங்களால் புகழப்பட்ட இவர், அப்படியே கட்சி சார்பற்று நேர்மையான ஆளுனராகவும் இருப்பார் என மக்கள் நினைத்தனர். நேற்று ஆளுநர் மாளிகையில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வ கணபதி ஆகியோருக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விஷயம் புதுவை முதல்வருக்கு தெரிவிக்கப்படாமல் நடந்தேறியதாகத் தெரிகிறது. இதனிடையே மரபை மீறி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார் என அரசியல் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேர்மையாளர் என்று புகழப்பட்ட கிரண்பேடி,  பா.ஜ.க.- வின் மத்திய அரசுக்கு இப்படி தனது விசுவாசத்தை காண்பிப்பார் என்று சற்றும் எதிர்பாராத மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top