இஸ்ரேலில் மோடி | திருப்பிவிடப்பட்ட விமானம் | உடைபற்றிய உகாண்டா அரசின் உத்தரவு | நீட் தேர்வு மனு தள்ளுபடி | கிழக்கு மாகாண புதிய ஆளுநர் | டெங்கு கொசு ஒழிப்பு | மே.வங்க ஆளுநர் மிரட்டினார் | புதிய தலைமை தேர்தல் ஆணையர்
இஸ்ரேலில் நரேந்திர மோதி உரையின் 5 முக்கிய அம்சங்கள்
இஸ்ரேலுக்கு அரசுமுறையிலான பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி. இந்தப் பயணம், இஸ்ரேலுடனான இந்தியாவின் உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கும் என்று நம்பப்படுகிறது.
பறவையால் தாக்கப்பட்டதா? திருப்பிவிடப்பட்டது ஏர்-ஏசியா விமானம்
பறவையால் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஏர்ஏசியா எக்ஸ் விமானம் பிரிஸ்பேன் நோக்கி திருப்பிவிடப்பட்டது
மார்பகங்கள், தொப்புள், முழங்கால் தெரியாமல் உடையணிய உகாண்டா அரசு உத்தரவு
உகாண்டாவில் அரச பணியாளர்கள் கண்ணியமாக உடையணிந்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுளது. பெண்கள் மார்பங்களை மறைக்கும்படி சுற்றறிக்கை.
தமிழகத்தில் `நீட்‘ தேர்வுக்கு விலக்கு கோரிய மனு தள்ளுபடி
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக மாணவரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இலங்கை கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர்
இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
டெங்கு அச்சுறுத்தல்: கொசு ஒழிப்புப் பணியில் அதிகாரிகளுக்கு உதவும் இலங்கை ராணுவம்
நாட்டின் மிக மோசமான டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து, அதற்குக் காரணமான கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க, இலங்கை சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் பணியில் படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மே.வங்க ஆளுநர் திரிபாதி என்னை மிரட்டி, அவமானப்படுத்தினார்: மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு
மேற்குவங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி என்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டினார். அவரது பேச்சால் எனக்கு அவமானம் ஏற்பட்டது என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம்
நசீம் சைதிக்குப் பதிலாக புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டார்.