சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேட்மின்டனுக்கான ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்த் வெற்றிபெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீனாவின் சென் லோங்கை 22-20, 21-16 என்ற நேர் செட்களில் வென்று அப்பட்டத்தை வென்றுள்ளார்.
மூன்றாவது முறையாக சுப்பர்ஸீரீஸ் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 56.250 டாலர் பரிசு பெற்றார். பேட்மின்டன் உலக சம்மேளனத்தின் (BWF) தரப்பட்டியலில் 11 வது இடத்தில் இருக்கும் 24 வயதான, குண்டூரில் பிறந்த ஸ்ரீகாந்த் தனது ஐந்து வருட போட்டிகளில் அவரை எதிர்த்து விளையாடிய 28 வயதான சென் லோங்கை இதற்கு முன்பு ஒருபோதும் வென்றதில்லை.
முன்னதாக, கடந்த 18-ஆம் தேதியன்று, ஜகார்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார். இதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு சூப்பர் சீரீஸ் பட்டங்களை ஸ்ரீகாந்த் வென்றுள்ளார்.
ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் தொடர்களின் இறுதியாட்டங்களில் கிடாம்பி ஸ்ரீகாந்த் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.