நீட் தேர்வு முடிவுகள்: தமிழக மாணவர்களுக்குப் பெரும் பின்னடைவு

நீட் தேர்வு முடிவுகளை இன்று சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. முதல் 25 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மணவர்கள் ஒருவர்கூட இடம் பெறமுடியவில்லை.

கடந்த மே 7-ம் தேதி நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புக்களில் சேருவதற்கான நீட் (NEET) தேர்வு நடத்தப்பட்டது.  இத்தேர்வு, தமிழக மானில கல்வித்துறையின் பாடத்திட்டத்திற்கும், மத்திய சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கும் அதிக வித்தியாசம் இருப்பதால், தமிழகத்தில் நடத்தப்பட மாட்டாது என்று மானில அரசு, உறுதியளித்திருந்த போதும், மத்திய அரசின் கோரிக்கையின் மீதான உச்சநீதிமன்ற ஆணையால் தமிழக மாணவர்களின் மீது திணிக்கப்பட்டது. மாணவர்களும் வேறுவழியின்றி நீட் தேர்வை சந்தித்தனர்.

ஜெயலலிதா இறந்தபின் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்த அதிமுக கோஷ்டிகளும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்ற ஒரே கொள்கையக் கொண்டுள்ள தமிழக அரசும், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்லூரிக் கனவுகளைப் பற்றி எதுவும் கவலைப் படாமல், மத்திய அரசின் தலையாட்டிப் பொம்மையாக இருந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் கானல் நீராகப் போகும் நிலைமையே தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்திருந்தால் தமிழக மாணவர்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட நிச்சயம் அனுமதித்திருக்க மாட்டார் என்பதை மட்டும் நாம் உறுதியாகக் கூறமுடியும்.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top