ஐசிசி சாம்பியன்ஸ்: இந்தியா வங்கதேசத்தை வென்று இறுதிபோட்டிக்குத் தகுதி

இன்று நடைபெற்ற இந்தியா,வங்கதேசம் இடையேயான சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியா வென்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.

வங்கதேசம் முதலில் பேட் செய்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் 265 ரன் வெற்றி இலக்கோடு ஆடத்துவங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் தவானும் சிறப்பாக ஆடினர். ஷிகர் தவான் முர்தஸாவின் பந்துவீச்சில் 46 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித் சர்மாவும் அணித் தலைவர் விராத் கோஹ்லியும் இணைந்து 40.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பில் மொத்தம் 265 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றியடையச் செய்தனர். ரோகித் சர்மா 123 ரன்களும், விராத் கொஹ்லி 96 ரன்களும் பெற்றனர்.

வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடும்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top