உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி காலமானார்

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.  மும்பையில் பிறந்து வளர்ந்த பகவதி, வழக்கறிஞராக மும்பை ஐகோர்ட்டில் பணியாற்றியிருந்தார். 1973-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டின் 17-வது தலைமை நீதிபதியாக கடந்த 1985-86-ம் ஆண்டுகளிலும் திறம்பட பணியாற்றினார்.  வயது முதுமை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலகுறைவால் சிகிச்சை பெற்றுவந்த நிலையில். நேற்று காலமானார். இவருக்கு மனைவியும், முன்று மகள்களும் உள்ளனர். பகவதி இறுதி சடங்கு நாளை(ஜூன்17) நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top