தமிழக காங்கிரஸ் கட்சியின் 72 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிறப்பித்து உள்ளார்.
தென்சென்னை மாவட்ட தலைவராக கராத்தே தியாகராஜனும், வட சென்னை மாவட்ட தலைவராக எம்.எஸ்.திரவியமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 63 ஆக இருந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சென்னை சிவராஜசேகரன், மேற்கு சென்னை வீரபாண்டியன், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊட்டி கணேஷ், உட்பட 72 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலுடன் ஜனார்த்தன் திவேதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.