அதிமுகவில் பரபரப்பு : தினகரனுடன் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

அதிமுகவில் தற்போது உச்சக்கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எம்.எல்.ஏ.க்கள் பலரும் சந்தித்து வருகின்றனர்.  இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் தனபாலுவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏற்கனவே ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என்ற இரு பிரிவாக இருந்த அதிமுகவில், இப்போது தினகரன் அணி என்ற மூன்றாவது அணியும் உருவாகும் நிலையில் இருக்கிறது.

தலைமைச் செயலகத்தில் அனைத்து அமைச்சர்கள் அறையிலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் மாட்டப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை சமிக்ஞை அனுப்பும் வகையில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வர் பழனிசாமி அரசுக்கு 121 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதில் தற்போது தினகரனுக்கு ஆதரவாக 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் செயல்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் பழனிசாமியின் அரசு தப்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் வரும் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. சட்டங்களை நிறைவேற்றுவது, மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது போன்றவற்றில் இவர்கள் 3 அணிகளாக செயல்பட்டால், முதல்வர் பழனிச்சாமியின் ஆட்சி கவிழும் என்று கருத வாய்ப்பிருக்கிறது.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top