தமிழக மீனவர்களின் 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு முடிவு

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்த 145 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறை பிடிக்கப்பட்ட 143 படகுகளும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசிடம் உள்ளது. சிறை பிடிக்கப்பட்டுள்ள 143 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். படகுகளை விடுவிக்க மத்திய அரசு இலங்கை அரசுக்கு கோரிக்கை அளித்துள்ளது. இதையடுத்து இன்று தமிழக அரசுக்கு சொந்தமான 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட 145 படகுகளில், வெறும் 42 படகுகள் மட்டுமே விடுவிக்கப்பட்டது மீனவர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top