ஜூலை மாதம் அரசியலில் இறங்குவாரா ரஜினி ?

நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தருணங்களில் தான் அரசியலில் குதிக்கப் போவதாக சூசகமான தகவல்களை வெளியிடுவதும், பிறகு அரசியலில் தற்போது இறங்கவில்லை என்பதுவும் நாம் அறிந்ததே. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார்.

எனவே, அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இதுபற்றி கர்நாடகாவில் வசிக்கும் ரஜினியின் அண்ணன் சத்யநாரயணா, செய்தியளர்களிடம் கருத்து தெரிவித்த போது “ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். ஊழலை அகற்றவே ரஜினி அரசியலுக்கு வர  விரும்புகிறார். இதுதான் மக்களின் விருப்பமும் கூட. இதுகுறித்து அவர் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் கருத்து கேட்டு வருகிறார். அனைவருமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் என கூறி வருகின்றனர். வருகிற ஜூலை மாதம் அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்புகளை ரஜினி வெளியிடுவார்” என கூறினார்.

இதன் மூலம், ரஜினிகாந்த அரசியலுக்கு வருவதில் உறுதியாகியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது ரஜினிகாந்தின் அடுத்த படமான “காலா”-வைப் பிரபலப்படுத்துவதற்கான உத்தியோ என்றும்  சிலர் கருதுகிறார்கள்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top