“வருடக்கணக்கில் முடிவெடுக்காமல் யோசிப்பவர் ரஜினி” என்று நடிகை கஸ்தூரி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசியல் தலைவர்கள் அனைவரும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி குறித்து பதிவிட்ட்டுள்ளார். அதில் அவர் கூறியதவது:-
நல்ல அரசியல் தலைவர் எதிர்ப்பாராத சூழ்நிலையிலும் உடனே முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி. மேலும் போர் போர் என்று ஒரே அக்கப்போராக உள்ளது என்று பதிவிட்டார்.
இதற்கு ரஜினி ரசிகர் பதில் ட்வீர் செய்துள்ளார். அதில், தலைவரை தாக்கி பிரபலமாவது உங்கள் தனிப்பட்ட விஷயம். அதற்காக அவர் ரசிகை என்று உலற வேண்டாம். சன் டிவியில் பாபநாசம் ப்ரமோவில் தெரிந்தது நீங்கள் யார் ரசிகையென்று, என பதிவிட்டார்.
ரஜினி ரசிகரின் இந்த ட்வீட்டுக்கு நடிகை கஸ்தூரி தக்க பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார். அதில், என்ன லாஜிக் பா இது? ரஜினி கூடத்தான் கமலை பாராட்டுறாரு, அப்போ அவரையும் திட்டுவியா? நீ பிறப்பதற்கு முன்பிருந்தே நான் ரஜினி ரசிகை, என்று பதிவிட்டுள்ளார்.