சட்டீஸ்கர்: மாவோயிஸ்ட்கள் திடீர்த் தாக்குதல்; 26 மத்திய ரிசர்வ் போலீஸார் பலி

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், தோர்னபால் ஜாகர்குண்டா சாலையில் உள்ள சிஆர்பிஎப் முகாமில் மாவோயிஸ்ட்கள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்ட் குழுவினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 26 சி.ஆர்.பி.ஃஎப். (மத்திய ரிசர்வ் போலீஸ் ) படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கிழக்கு முதல் தென்கிழக்கு வரை பல மாநிலங்களில் உள்ள சதுப்புநிலப் பிரதேசங்களை மாவோயிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
தாக்குதல் நடந்த சுக்மா மாவட்டம் மாவோயிஸ்ட்களின் கோட்டையாக கருதப்படுகிறது.

சாலை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட பணியாளர்களை காக்கும் பணியில், சிஆர்பிஎஃப் படையின் 74-வது பிரிவைச் சேர்ந்த போலீஸ் பிரிவினர் ஈடுபட்டபோது, மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் பதுங்கியிருந்து இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த 6 பேரில் 2 பேர் அபாயக்கட்டத்தைத் தாண்டவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கொல்லப்பட்ட மத்திய ரிசர்வ் போலீஸ்  படையினரிடமிருந்து மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களை களவாடிச் சென்றனர். பல மணி நேரம் நடந்ததாக கூறப்படும் இத்தாக்குதலில், பல நூறு கிளர்ச்சியாளர்கள் பங்கேற்றதாக ஒரு தகவல் தெரிவித்துள்ளது.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top