Day: April 25, 2017

“அமெரிக்க போர் கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்”

(பி.பி.சி. தமிழ்) கொரிய தீபகற்பத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பலை “மூழ்கடிக்க” வட கொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் போர் கப்பலான கார்ல் வின்சனை “ஒரே ஒரு அடியில் மூழ்கடித்துவிட முடியும்” என்ற எச்சரிக்கை நோடாங் ஷின்முன் செய்தித்தாளில் வெளியாகியுள்ளது வின்சன் கப்பலை முதன்மையாக கொண்டு சண்டைக்கு தயாராக இருக்கும் அமெரிக்க ராணுவ படை, இந்த வாரத்தில் தீபகற்பத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வட கொரியாவின் …

“அமெரிக்க போர் கப்பலை வட கொரியா மூழ்கடிக்கும்” Read More »

Share

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதி போட்டிக்கு மக்ரோங், லெ பென் தேர்வு

ஞாயிறன்று, முதற்சுற்றில் 96 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மக்ரோங் 23.9 சதவீதமும் மரைன் லெ பென் 21.4 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிகிறது. இவ்விரண்டு வேட்பாளர்களும், மத்திய வலதுசாரி கட்சியைச் சேர்ந்த ஃபிரான்ஸ்வா ஃபியோங் மற்றும் தீவிர இடது சாரிக் கட்சியைச் சேர்ந்த ஷான் லூக் மெலாங்ஷாங் ஆகியோருடன் கடுமையாக போட்டியிட வேண்டிருந்தது. இரண்டாம் சுற்றில் யார் வெற்றி பெற்றாலும் ஃபிரான்ஸ் அரசியலில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த இடது சாரிகள் மற்றும் மத்திய …

ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதி போட்டிக்கு மக்ரோங், லெ பென் தேர்வு Read More »

Share

ஆதார் அட்டை: பிரத்யேக தகவல்கள் அரசு வலைதளத்தில் கசிந்தன

(நன்றி: பி.பி.சி. தமிழ்) சண்டிகர் மாவட்ட நிர்வாக வலைதளத்தில் ஆதார் அடையாள அட்டை தொடர்பான தரவு மீறல்கள் ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. யூஐடி எனப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணுடன் சம்பந்தப்பட்ட நபரின் உணவுப்பொருள் வழங்கல் அட்டை தகவல்களும் வலைதளத்தில் காணப்பட்டது. பிரத்யேக தகவல்கள் கசிந்தது வெளிச்சத்திற்கு வந்தவுடன், இந்த வலைத்தள பக்கம் நீக்கப்பட்டது. முன்பு, இது போன்ற தரவுகள் ஜார்கண்ட் மாநில வலைத்தளத்திலும் கசிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவது தொடர்பாக பல்வேறு புகார்களும், …

ஆதார் அட்டை: பிரத்யேக தகவல்கள் அரசு வலைதளத்தில் கசிந்தன Read More »

Share

டி.டி.வி. தினகரனிடம் தொடரும் விசாரணை

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசரணை நடைபெறுகின்றது. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க புரோக்கர் சுகேஷை தாம் சந்தித்தது உண்மைதான் என  டிடிவி தினகரன் டெல்லி போலீசில் ஒப்புக் கொண்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் …

டி.டி.வி. தினகரனிடம் தொடரும் விசாரணை Read More »

Share

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு

விவசாயிகள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் சார்பாக முழு அடைப்பு நடைபெறுகின்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் பங்கேற்கின்றன.   இதற்கு தொழிற்சங்கங்களும் வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்றும், ஆட்டோக்கள் ஓடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களிலும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. பஸ்கள் ஓடும் என்று …

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு Read More »

Share

சட்டீஸ்கர்: மாவோயிஸ்ட்கள் திடீர்த் தாக்குதல்; 26 மத்திய ரிசர்வ் போலீஸார் பலி

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில், தோர்னபால் ஜாகர்குண்டா சாலையில் உள்ள சிஆர்பிஎப் முகாமில் மாவோயிஸ்ட்கள் திடீர்த் தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்ட் குழுவினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 26 சி.ஆர்.பி.ஃஎப். (மத்திய ரிசர்வ் போலீஸ் ) படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் கிழக்கு முதல் தென்கிழக்கு வரை பல மாநிலங்களில் உள்ள சதுப்புநிலப் பிரதேசங்களை மாவோயிஸ்ட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தாக்குதல் நடந்த சுக்மா மாவட்டம் மாவோயிஸ்ட்களின் கோட்டையாக கருதப்படுகிறது. சாலை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட பணியாளர்களை காக்கும் பணியில், …

சட்டீஸ்கர்: மாவோயிஸ்ட்கள் திடீர்த் தாக்குதல்; 26 மத்திய ரிசர்வ் போலீஸார் பலி Read More »

Share
Scroll to Top