விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன்: நக்மா பேட்டி

மதுரை விமான நிலையத்தில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் அணி பொறுப்பாளரும் நடிகையுமான நக்மா நிருபர்களிடம் கூறியதாவது:

மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு விவசாயிகளின் குறைகளை கேட்பதில்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை.

விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசை மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு இயக்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மகளிரணி செயலாளர் ஷோபா ஆஷா கூறியதாவது :

பாரதிய ஜனதா அரசு விவசாயிகளின் பிரச்சனைகளில் அக்கறை செலுத்தவில்லை. இதனால் நாடெங்கும் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top