மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டின் அரைஇறுதிப் போட்டியில் இந்திய அணி, தற்போதைய சாம்பியனான ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியைச் சந்திக்கவுள்ளது.
இப்போட்டியில் 171 ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், தனக்கு கிடைத்த வாய்ப்பில் திறமையை நிரூபித்து காட்டியிருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், எனது வாழ்க்கையில் நான் விளையாடிய மிகச்சிறந்த ஆட்டம் இது தான் என்றும் கூறினர்.
இந்திய கேப்டன் மிதாலிராஜ் கூறுகையில், “ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எளிதான விஷயமல்ல. இது மிகப்பெரிய சாதனையாகும். அசாதாரணமான ஒரு இன்னிங்சை ஹர்மன்பிரீத் கவுர் ஆடியிருக்கிறார். ஒரு இந்தியராக நான் பார்த்த சிறந்த இன்னிங்சில் இதுவும் ஒன்றாகும்.” என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘மகளிர் உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் இந்திய அணிதான் வெற்றி பெறும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.