பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும்

பாகிஸ்தானுக்கு கடும் நிபந்தனைகளுடனேயே அமெரிக்க நிதி வழங்கப்படும் என்று அமெரிக்க பாராளுமன்ற குழு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின், ஒதுக்கீட்டுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த கூட்டத்தில், 2018-ம் ஆண்டுக்கான மாகாணம் மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தி ஒப்புதல் வழங்கப்பட்டது. இம்மசோதவின்படி அவர் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க வேண்டுமானால், அங்கு இயங்கி வருகிற அனைத்து விதமான பயங்கரவாத குழுக்கள் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவும் வழி வகுத்துத்தந்துள்ளது.

இனி இந்த மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

இந்த மசோதாவின்படி அமெரிக்கா வழக்கமான சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு தற்செயல் நடவடிக்கைகள் நிதியாக 47 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்து 500 கோடி) உலக நாடுகளுக்கு வழங்க முடியும். இந்தத் தொகை, 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.65 ஆயிரம் கோடி) குறைவு ஆகும்.

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top