நடிகர் கலாபவன் மணி மரணத்தில் நடிகர் திலீபுக்கு தொடர்பு இருப்பதாக பிரபல இயக்குனர் பைஜூ இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார்.
நடிகை பாவனா கடத்தல் விவகாரம் தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டு உள்ளார். இந்நிலையில் மலையாள திரைப்பட இயக்குநர் பைஜூ வெளியிட்ட அறிக்கையில், நடிகர் கலாபவன் மணியின் மரணத்திற்கு திலீப் தான் காரணம் என்றும், அதற்கு முறையான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொச்சி மாவட்டத்தில் கொட்டாரகரையில் அமைந்துள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் இயக்குநர் பைஜூவும் இன்று புகார் அளித்தார். இதனால் மலையாள பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.