ஜம்மு மற்றும் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என புத்தக கையேட்டில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சி மீது மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.நாட்டின் வரைபடம் அடங்கிய ஒரு புத்தக கையேட்டை காங்கிரஸ் கட்சி நேற்று(ஜூன்3) வெளியிட்டது. ராஷ்டீரிய சுரக்ஷா பர் ஆன்ச் என்ற தலைப்பிலான அந்த புத்தகம் 16 பக்கங்களை கொண்டது. அதில் 12வது பக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதனையும் இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் என குறிப்பிட்டுள்ளது.இதுகுறித்து பேசிய மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, காஷ்மீரை பாகிஸ்தானுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ புத்தக கையேட்டில் காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என பதிவிட்டு வெளியிடப்பட்டுள்ளது என கூறினார்.மன்னிப்பே கிடையாதுஇதற்காகவா நமது இறையாண்மை மற்றும் நாட்டின் ஒற்றுமைக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரமிக்க நமது நூற்றுக்கணக்கான வீரர்கள் கடந்த ஆண்டுகளில் தங்களது உயிரை இழந்தனர்? காங்கிரசின் புத்தகத்தில் ஒரு பகுதியாக பதிவாகியுள்ள அவர்களது இந்த எண்ணத்திற்காக அக்கட்சியை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்றார்.